tamilnadu

img

வங்கிகளில் கல்வி கடன் வழங்குவது 25 சதவீதம் குறைந்துள்ளது

வங்கிகளில் கல்வி கடன் வழங்குவது கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில், கடந்த 2015-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், 3.34 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வாங்கியிருந்தனர். இதுவே 2016-ஆம் ஆண்டில் 3.12 லட்சம் மாணவர்களும், 2017-ஆம் ஆண்டில், 2.92 லட்சம் மாணவர்களும், 2018-ஆம் ஆண்டில், 2.74 லட்சம் மாணவர்களும் கல்வி கடன் பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து, நடப்பு ஆண்டில், கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையில், 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே கல்விக் கடனை பெற்றுள்ளனர். இவ்வாறு கல்விக் கடன் வழங்குவது குறைந்து கொண்டே வருகிறது. கடனை வாங்கும் பலர் அதை திருப்பி செலுத்தாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

கல்வி கடன் வழங்குவது குறைந்துள்ள நிலையிலும், கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வி கடன் வழங்கப்பட்ட தொகை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2015-ல் சராசரி கடன் அளவு 5.3 சதவீதமாக இருந்தது, 2016-ல் 5.9 சதவீதமாகவும், 2017-ல் 6.9 சதவீதமாகவும், 2018-ல் 7.8 சதவீதமாகவும், இதுவே கடந்த மார்ச் 2019-ல் அதிகபட்சமாக 9.02 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

இதை அடுத்து, கல்விக் கடனின் மதிப்பு ரூ.5.3 லட்சத்திலிருந்து 9 லட்ச ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2015-ல் சராசரி கடன் அளவு 5.3 சதவிதமாக இருந்தது. இதுவே, 2016-ல் 5.9 சதவீதமாகவும், 2017-ல் 6.9 சதவீதமாகவும், 2018-ல் 7.8 சதவீதமாகவும், 2019-ல் அதிகபட்சமாக 9.02 சதவீதமாகவும் இருந்துள்ளது.  அதே சமயம், கல்வி கடன் கடந்த 2016-ம் ஆண்டு 16,800 கோடி ரூபாயாக இருந்தது நடப்பு ஆண்டில், 22,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கல்வி கட்டணம் மற்றும் அதிக தொகைக்கான கடன்களை மட்டுமே வங்கிகள் வழங்க முன்வருவது போன்றவையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 27.8 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனாலும் வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2015-ல் 7 சதவீதமாக இருந்த வாராக்கடன், 2016-ல் 8.7 சதவீதமாகவும், 2017-ல் 10.2 சதவீதமாகவும், 2018-ல் 12 சதவீதமாகவும், 2019-ல் 12.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் வாராக்கடன், இனி வரும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அரசு சார்ந்த பொதுத்துறை வங்கிகள் நடைமுறையும், வங்கிக் கொள்கைகளையும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில், ரூ.4 லட்சம் வரை கடன் வாங்குபவர்களிடத்தில் எந்தவித கொலட்ரால் செக்யூரிட்டியும் வாங்க முடிவதில்லை. இவையே தொகைகளே வாராக்கடன்களாக மாறுகின்றன பொதுத்துறை வங்கிகள் தெரிவிக்கின்றன. 

மேலும், பொருளாதார சரிவு, தனியார் மையமாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் குறைவான வேலை வாய்ப்பு ஆகியவையே இதற்கு காரணம் என்று வங்கியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.